×

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தது மக்கள் நீதி மய்யம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. ஏ.ஜி.மௌரியா, ஆர்.தங்கவேலு, ஆ.அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணி ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல்திட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது என மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு பெருவெற்றியை ஈட்டுவதற்காக மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய ‘தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு’ உருவாக்கப்பட்டுள்ளது.

குழு உறுப்பினர்கள்: A.G. மௌரியா, I.P.S., (ஓய்வு), துணைத் தலைவர் R. தங்கவேலு, துணைத் தலைவர்
ஆ. அருணாச்சலம், பொதுச் செயலாளர் எனது நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் இந்தக் குழுவிற்கு 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்பதற்கும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவிற்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தது மக்கள் நீதி மய்யம் appeared first on Dinakaran.

Tags : People's Justice Ministry ,Election Task Coordination Committee ,Chennai ,Election Coordination Committee ,A. G. Maurya ,R. Tangavelu ,Arunachalam ,People's Justice ,Mayyam ,Election Task Coordination Committee for Parliamentary Elections ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...